25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


இந்திய வீரர் பிரவீன் சர்மா ஆசிய யூத் பாரா விளையாட்டு குண்டு எறிதல் போட்டியில் தங்கம் வென்றார். 55 பதக்கம் கைப்பற்றிய இந்தியா, பதக்கப்பட்டியலில் 7வது இடத்தில் நீடிக்கிறது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்திய வீரர் பிரவீன் சர்மா ஆசிய யூத் பாரா விளையாட்டு குண்டு எறிதல் போட்டியில் தங்கம் வென்றார். 55 பதக்கம் கைப்பற்றிய இந்தியா, பதக்கப்பட்டியலில் 7வது இடத்தில் நீடிக்கிறது.

.ஆசிய யூத் பாரா விளையாட்டு துபாயில், மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியில் இந்தியா சார்பில் 99 பேர் (61 வீரர், 38 வீராங்கனை) பங்கேற்கின்றனர்.

, 13.59 மீ., எறிந்தஇந்தியாவின் பிரவீன் சர்மாஆண்களுக்கான குண்டு எறிதல் ('எப் 11-13') பைனலில் தங்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரர் தேவிபிரசாத் (8.08 மீ.,) 5வது இடம் பிடித்தார்.'எப் 32-34' பிரிவு குண்டு எறிதல் பைனலில் இந்திய வீரர் வினேஷ் (7.46 5.,) வெண்கலம் வென்றார்.

ஆண்களுக்கான ஈட்டி எறிதல் ('எப் 35-38') பைனலில் இந்தியாவின் விக் ஷீத்  குமார் (30.87 மீ.,) தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

('டி20') பைனலில் பெண்களுக்கான 400 மீ., ஓட்டத்தின் இலக்கை, ஒரு நிமிடம், 07.07 வினாடியில் கடந்த இந்தியாவின் புவி அகர்வால் தங்கம் வென்றார். ஆண்களுக்கான 400 மீ., ஓட்டத்தின் ('442-47, 61-64') பைனலில் இந்தியாவின் நரேஷ் (1 நிமிடம், 00.27 வினாடி) வெள்ளி கைப்பற்றினார். பெண்களுக்கான வட்டு எறிதல் ('எப்  51-57') பைனலில் இந்தியாவின் கோகிலா (15.4 மீ.,) வெண்கலத்தை தட்டிச் சென்றார். ஆண்களுக்கான வட்டு எறிதல் ('எப்11-13') பைனலில் இந்தியாவின் பிரவீன்  (34.08 .,),இர்பான் திவான் (28.12 மீ.,) முறையே வெள்ளி, வெண்கலம்கைப்பற்றினர்.

இதுவரை 19 தங்கம், 15 வெள்ளி, 21 வெண் கலம் என, 55 பதக்கம் கைப்பற்றிய இந்தியா, பதக்கப்பட்டியலில் 7வது இடத்தில் நீடிக்கிறது. முதலிடத்தில் உஸ்பெகிஸ்தான் (97 தங்கம், 55 வெள்ளி, 35 வெண்கலம்) உள்ளது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News